Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மன்னாரில் தடுப்பூசி அட்டை பரிசோதிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!


மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் இன்று (15) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டையை பரிசோதிக்கும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். அல்லது அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த 13ஆம் திகதி ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன்  தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் தடுப்பூசி அட்டைகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 






No comments