முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாயாறு பகுதியை சேர்ந்த ஏ.கதீஸ்கரன் (வயது 23) எனும் இளைஞனே படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செம்மலையில் இருந்து நாயாறு நோக்கி பயணித்துக்கொண்டு இருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து பனங்கூடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
No comments