மதுரையில் இருந்து இலங்கை செல்ல முற்பட்டவர்களிடம் இருந்து 16,100 அமெரிக்க டொலா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் சுங்கத் துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் திங்கட்கிழமை இலங்கை செல்ல பயணிகள் விமானம் தயாராக இருந்தது. அதில், பயணம் செய்யவிருந்த பயணிகளை சுங்கத் துறையினா் சோதனையிட்டனா். அப்போது, இலங்கை வழியாக டுபாய் செல்வதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 16 மீனவா்கள் வந்திருந்தனா். அவா்களை சோதனையிட்டபோது, ஒவ்வொருவரும் தலா ஆயிரம் அமெரிக்க டொலா் வைத்திருந்தனராம்.
சந்தேகமடைந்த சுங்கத் துறையினா் அவா்களிடம் விசாரித்தபோது, கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் பகுதியைச் சோ்ந்த பா்னாபஸ் சந்திரசேகா், அதே பகுதியைச் சோ்ந்த மரியஜான் அருள்சேகா் ஆகிய இருவரும் மீனவா்களிடம் தனித்தனியே அமெரிக்க டொலா் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதை அடுத்து, ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்க டொலா் கொண்டு செல்ல முற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்த 16,100 அமெரிக்க டொலா்களை பறிமுதல் செய்தனா்.
No comments