Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கடந்த 24 நாட்களில் வடக்கில் 310பேர் கொரோனோவால் உயிரிழப்பு!


வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தில் நேற்று 24ஆம் திகதிவரை 8 ஆயிரத்து 401 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 310 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, நேற்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் 38 தொற்றாளர்களும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

2020 மார்ச் தொடக்கம் நேற்று வரை வடக்கு மாகாணத்தில் 35 ஆயிரத்து 571 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 719 பேர் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 371 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 394 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 14 ஆயிரத்து 634 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 228 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது  

No comments