Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழிலிருந்து கஞ்சா கடத்தி சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது!


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சென்ற காரில் கஞ்சா கடத்தி சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் , பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,  மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த காரை சோதனையிட்ட பொலிஸார் 6 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர். 

அதனை அடுத்து காரில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளார்கள்.

இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புத்தளத்தினை சேர்ந்த 34 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றும் நெச்சிகாம பகுதியினை சேர்ந்த 25 வயதுடைய நபரும் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய நபருமே  கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

No comments