Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தனக்கு தானே தீ மூட்டியவர் , மனைவிக்கும் தீக்காயங்களை ஏற்படுத்தி விட்டு உயிரிழப்பு

 


தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ மூட்டியவரால் , அவரது மனைவிக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளன. 

தவறான முடிவெடுத்து தனக்கு தானே குடும்பஸ்தர் ஒருவர் தீ மூட்டியதில் அவர் உயிரிழந்துள்ளார். 
 
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த சோமசுந்தரம் ரவிச்சந்திரம் (வயது 48) எனும் 10 பிள்ளைகளின் தந்தையே அவ்வாறு உயிரிழந்துள்ளார். 
 
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
 
நேற்று முன்தினம்  சனிக்கிழமை குறித்த நபர் போதையில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள தனது சகோதரன் வீட்டுக்கு சென்று, சகோதரனுடன் முரண்பட்டு அவரை தாக்கியுள்ளார். 
 
அதன் பின்னர் தனது வீட்டுக்கு வந்து உடலில் பெற்றோலை ஊற்றிக்கொண்டு அதனை பற்ற வைக்க அடுப்படிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார். 
 
இவர் பெற்றோலை உடலில் ஊற்றிக்கொண்டு பற்ற வைக்க அடுப்புக்கு அருகில் சென்ற போதே அவரது உடலில் இருந்த பெற்றோலில் தீ பற்றிக்கொண்டது. அதேவேளை அடுப்படியில் சமைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி மீதும் தீ பற்றிக்கொண்டது. 
 
இவர்களில் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் கூடி தீயினை அணைத்து இருவரையும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர். 
 
அதில் கணவன் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்துள்ளார். மனைவி தீக்காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். 
 
அதேவேளை உயிரிழந்த குடும்பஸ்தவரின் தாக்குதலுக்கு இலக்கான அவரது சகோதரனும் காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

No comments