Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாத்தறையில் துப்பாக்கி சூடு - சன்ஷைன் சுத்தா உயிரிழப்பு!


மாத்தறை வரக்காப்பிட்டிய பகுதியில் வாகனத்தில் சென்றவர் மீது மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கி பிரயோகத்தில் வாகனத்தில் சென்றவர் உயிரிழந்துள்ளார். 

பாதாள உலக குழுவை சேர்ந்த "சன்ஷைன் சுத்தா " என்று அழைக்கப்படும்  அமில பிரசன்ன ஹெட்டிஹேவா என்பவரே துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  
 
இவர் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதூஷுக்கு  நெருக்கமானவர் என்றும் , இவரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரங்களில் ஈடுபட்டு வந்த நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்னர். 
 
அதேவேளை கடந்த ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி வெலிகம - மிரிஸ்ஸ மீன் பிடி துறைமுக வளாகத்தில் இவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் , அவர் படுகாயமடைந்திருந்தார். 
 
அன்றைய தினம் மோட்டார் சைக்கிளில் வருகை தந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் அங்கிருந்து முச்சக்கர வண்டியில் தப்பி சென்று இருந்தனர். 
 
அந்நிலையிலேயே தற்போது மீண்டும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார். 

No comments