சுமார் 79 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 9 கிலோ 914 கிராம் நிறைகொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே, கடல் வழியாக நாட்டுக்குள் கடத்தப்படவிருந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
ஐஸ் போதைப்பொருளும் டிங்கி ரக படகொன்றும் தமது பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.








No comments