தெற்காசிய வலயத்தில் கொரோனா மரண வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கொரோனா மரணங்கள் இலங்கையில் 19 சதவீதத்தாலும் இந்தியாவில் 17
சதவீதத்தாலும் திமோர்-லெசுடேயில் 32 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் தெற்காசிய பிராந்தியத்தில் 14,000 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. ஓப்பீட்டளவில் இது 20 சதவீத வீழ்ச்சி எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







No comments