Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஊழியரின் முகத்தில் சுடுதண்ணீர் ஊற்றிய இராணுவ வீரர்!


காலி கராப்பிட்டிய வைத்தியசாலை சிற்றுண்டி சாலை ஊழியருக்கு இராணுவ வீரர் ஒருவர் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றியுள்ளார். 

சம்பவத்தில் காயமடைந்த ஊழியர் கராப்பிட்டிய வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 
 
பத்தேகம அம்பேகம பகுதியை சேர்ந்த இராணுவ வீரரின் 08 வயது மகன் சுகவீனம் காரணமாக குறித்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 
 
மகனுடன் வைத்திய சாலையில் தங்கியுள்ள தந்தையான இராணுவ வீரர் , சிற்றுண்டி சாலைக்கு சுடுதண்ணீர் வாங்க சென்ற போது , சுடுதண்ணீர் வழங்குவதற்கு ஏற்பட கால தாமதத்தால் , ஊழியருக்கு , அவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து ஆத்திரமடைந்த இராணுவ வீரர் சுடுதண்ணீரை ஊழியரின் முகத்தில் ஊற்றியுள்ளார். 
 
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments