Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்!


அநுராதபுரம்- முரியாகல்ல பகுதியில் மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 60 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, மூவர் குறித்த பகுதியில் சென்றுக்கொண்டிருந்த வேளையில், இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது  ஊர்மக்களுக்கு அதனை தெரியப்படுத்துவதற்காக சென்ற மூன்றாவது நபர் மீது வேறு மற்றுமொரு இடத்திலிருந்து கட்டுத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில்  அவரும் காயங்களுக்கு உள்ளாகியதாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

No comments