Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வெற்றிலைக்கேணியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவருக்கும் கொரோனோ!


வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. 

அப்பகுதியை சேர்ந்த குயின்ரன் சுதர்சன் (வயது 38) எனும் மீனவரே உயிரிழந்துள்ளார். 

கடந்த வியாழக்கிழமை வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கரைவலை தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்திருந்தார். 

அவரது சடலத்திற்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. 

அதனை அடுத்து அவரது சடலத்தை சுகாதார விதிமுறைகளின் கீழ் மின் தகனம் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதர பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். 

No comments