ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனா தற்காலிக அரச தலைவரானார்.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இன்று காலை அமெரிக்கா பயணமானார். அதன் பின்னரே சபாநாயகர் நாட்டின் தற்காலிக அரச தலைவரானார்.
இதற்கிடையே, கடந்த வாரம் இத்தாலியின் போலோக்னாவில் நடந்த ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் அந்த நாட்டுக்குப் பயணமாகியுள்ளார்.
No comments