Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கை மீது கடும் கோபம் கொண்டு திரும்பிச்சென்ற சுற்றுலாப் பயணி!


இலங்கைக்கு வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் சிரமத்திற்குள்ளாகி திரும்பிச் சென்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 7 முதல் 8 நாட்கள் சுற்றுலாவாக இலங்கைக்கு வந்த அவர், பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படாததால் 5 மணி நேரத்திற்குள் திரும்பிச் சென்றதாக கூறியிருந்தார்.

போக்குவரத்து அல்லது ஹோட்டல் வசதிகள் இல்லாததால் அவர் கடுமையான சிரமத்திற்கு ஆளானதாகவும் தன்னால் அவரது பயண நிறுவனத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அத்தோடு நாடு சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்திருக்கும் என்று அதிகாரிகள் கூறினாலும், வசதிகள் இல்லாததால், இலங்கை இன்னும் முடக்க நிலையில் உள்ளது என வீடியோ ஒன்றினை வெளியிட்டு அந்த சுற்றுலாப் பயணி கூறியிருந்தார்.

இருப்பினும் அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

No comments