யாழ்ப்பாணம் பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் வாளுகள் , கூரிய ஆயுதங்களுடன் வன்முறை கும்பல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
குறித்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ளவர்களுடன் முரண்பட்ட நிலையில் வெளியிடங்களில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட வன்முறையாளர்களை வாளுகள் , கூரிய ஆயுதங்கள் உள்ளிட்டவற்றுடன் அப்பகுதிக்குள் இறக்கி அட்டகாசம் புரிந்துள்ளனர்.
அதன் போது சிலரின் வீடுகளுக்கு கல் வீசி தாக்குதல் நடாத்தியதுடன் , வேலிகள் சிலவற்றுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.
அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்த போது வன்முறை கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
அந்நிலையில் அப்பகுதி மக்களுடன் ஏற்கனவே முரண்பட்டு இருந்த அப்பகுதியை சேர்ந்த நபரை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments