Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தடுப்பூசி பெறாதவர்களை அனுமதிக்காமை தொடர்பில் விளக்கம் கோரியுள்ள மனிதவுரிமை ஆணைக்குழு!


வவுனியா பிரதேச செயலகத்தினுள் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை  மாத்திரமே அனுமதிக்க முடியும் என பிரதேச செயலர் அறிவித்துள்ள நிலையில் , அது தொடர்பில் இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடமாகாண இணைப்பாளர் த. கனகராஜ் எழுத்து மூலமான விளக்கம் கோரியுள்ளதாக அறிய முடிகிறது. 
 
வவுனியா பிரதேச செயலகத்தினுள் சேவை பெற வருவோர் அடையாள அட்டையையும் , தடுப்பூசி அட்டையையும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் , தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதோர் பிரதேச செயலகத்தினுள் அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள் என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. 

அது தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் , மனிதவுரிமை ஆணைக்குழு பிரதேச செயலாளரிடம் அது தொடர்பில் எழுத்து மூலமான விளக்கத்தினை கோரியுள்ளது. 

No comments