தென் கொரியாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்வதற்கு நேற்று (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்கவை விமானத்தில் பயணிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை எடுத்து வராத காரணத்தினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் குறித்த அட்டையின் புகைப்படம் ஒன்றை வட்ஸ்அப் ஊடாக பெற்றுக் கொண்டு அதனை காண்பித்ததன் பின்னர் அவருக்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
No comments