ஒழுங்காக படிக்காத மகனை தந்தை தும்புத்தடியால் தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளார்.
காலி மஹாமோதர பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற உள்ள மகனை தந்தை படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். தனது அறிவுறுத்தலை மீறியதால் , மகன் மீது தும்புத்தடியால் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் மயக்கமுற்ற நிலையில் காலி கராப்பிட்டிய வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு , சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கு சிகிச்சை பலனின்றி மகன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மகன் மீது தாக்குதலை மேற்கொண்ட தந்தையை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments