Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வீடுபுகுந்து திட்டிய இளைஞனை மின்சாரத்தில் சிக்க வைத்து கொலை செய்த நபர் கைது!


வீட்டு வளவுக்குள் நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டிய நபரை மின் கம்பியில் சிக்க வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் மீகமவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் முற்றியதில் 19 வயதான இளைஞன் ஒருவன், தர்க்கம் இடம்பெற்ற பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் தனது வளாகத்தில் வைத்திருந்த மின் கம்பியில் இளைஞனை சிக்கவைத்துள்ளார்.

அதனால் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகி படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வீட்டின் உரிமையாளரான 50 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments