கையடக்க தொலைபேசி இலக்கங்களை வேறு வலையமைப்பிற்கு மாற்றிக்கொள்வதற்கான (Number Portability) வசதியை சட்டரீதியாக வழங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது என இலங்கையின் தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அனைத்து தொழில்நுட்ப செயற்பாடுகளும் நிறைவடையும் பட்சத்தில், 2022 மே முதல் இந்த சேவை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பாவனையாளர்கள் ஒரு வலையமைப்பில் இருந்து மற்றொரு வலையமைப்பிற்கு மாறினாலும் அவர்களின் தொலைபேசி இலக்கத்தை நிலையாகப் பேண முடியும் என மேலும் தெரிவித்தார்.






No comments