ஹபரன ஹுருலு தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சஃபாரி ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.
பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய தரிந்து சுமதிரத்ன என்பவரே உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நான்கு சிறுவர்கள் உட்பட காயமடைந்த 8 பேர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குழுவினர், பூங்காவுக்கு விஜயம் செய்து கொண்டிருந்த போது யானை பயத்தினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்து இடம்பெற்ற போது சபாரி ஜீப்பில் 11 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துக்கு இலக்கானவர்கள், பன்னிபிட்டிய மற்றும் மாத்தறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
No comments