Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வீதியோரமாக அநாதரவாக கிடந்த பயணப்பையில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!


சபுகஸ்கந்த பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்ட பயணப் பையிலிருந்து பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் குறித்த இடத்துக்கு சென்றுள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கொழும்பு – டாம் வீதியில் பயணப் பையிலிருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டது குறித்த பெண்ணின் தலை இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் , அக்கொலை சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments