Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கேகாலை , குருநாகல் பகுதிகளில் மண்சரிவில் சிக்கி நால்வர் உயிரிழப்பு!


கோப்புப்படம் 

கேகாலை − ரம்புக்கன்ன உடகலதெனிய பகுதியில் மண்சரிவில் வீடொன்று சிக்குண்டதில் அவ்வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  மூவர் உயிரிழந்துள்ளதுடன்,  ஒருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய் ,8 மற்றும் 14 வயதான அவரது இரு மகள்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தந்தை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதேவேளை குருநாகல் − நாரம்மல − வென்னோருவ பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் 23 வயதான யுவதி மரணமடைந்துள்ளார்.

வீட்டிலிருந்த தாய், மகன் ஆகிய இருவரும் தப்பியுள்ளனர். மண்சரிவுக்குள் சிக்கி காயமடைந்த மகள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

No comments