கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் குமரபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரராசா யூட்கபிசன் (வயது 29) மற்றும் பரந்தனை சேர்ந்த சவுந்தானந்தன் காந்தீபன் (வயது 34) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் பரந்தன் சந்திக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர் என கிளிநொச்சி பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேவேளை விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரின் பிறந்த தினம் இன்றைய தினம் என பொலிஸார் தெரிவித்தனர்
No comments