Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

முல்லையில் ரவிகரன் அஞ்சலி!


மாவீரர் தினமான இன்றைய தினம், பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி மாவீரர்களுக்கு, வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியதுடன் , வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சுடரேற்றி ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் செய்தார். 

“எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்த கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினோம்” என துரைராசா ரவிகரன் அதன் போது தெரிவித்துள்ளார்.

இந்த அஞ்சலி நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.








No comments