Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மூதாட்டி உயிரிழப்பு - பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு சென்றோர் தனிமைப்படுத்தலில்!


தனது பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட மூதாட்டி கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா  கண்டறியப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
 
அந்நிலையில் குறித்த மூதாட்டியின் வீட்டில் அவரது பேத்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. மூதாட்டி கொரோனா தொற்றால் உயிரிழந்தமையால் ,, அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தி வருகின்றனர். 

No comments