திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி 13 ஆம் கட்டை சந்தியில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (01) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , கந்தளாய், கன்தலாவ பகுதியைச் சேர்ந்த சசில மல்சான் (21வயது) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 13 ஆம் கட்டை சந்தியில் இளைஞன் ஒருவன் வீதியோரத்தில் தலையில் காயங்களுடன் வீழ்ந்து கிடந்த நிலையில் இளைஞனை மீட்டு அருகில் உள்ள தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள்ளார்.
சம்பவம் தொடர்பில் , தம்பலகாமம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments