Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

முல்லைத்தீவில் 12 பேருக்கு தடையுத்தரவு!


முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுக்க 12 பேருக்கு முல்லைத்தீவு நீதிமன்று  தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
முல்லைத்தீவு பொலிஸார் , முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தமக்கு புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்று உள்ளதாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் AR வழக்கு தாக்கல் செய்தனர். 
 
குறித்த வழக்கில் , நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரதும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் எம்.கே,சிவாஜிலிங்கம் , முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் சமூக செயற்பட்டார்கள் உள்ளிட்ட 12 பேரின் பெயர்களை குறிப்பிட்டு , அவர்களுக்கு எதிராக தடையுத்தரவு கோரி பொலிஸார் விண்ணப்பம் செய்தனர். 
 
அதனை அடுத்து நீதிமன்றினால் 12 பேருக்கும் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. 

No comments