ஒரு கட்டுரைக்கு 700 ரூபாய் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதனை வைத்து அவர்கள் எப்படி வாழ்வார்கள் ? இது தொடர்பில் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் கோரியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு - செலவு திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு , கிழக்கு ஊடகவியலாளர்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். அவர்கள் செய்தி சேகரிப்பு பணிகளுக்கு பெரும் இன்னல்களுடன் செல்கின்றனர். எனவே அவர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு மானியம் வழங்க வேண்டும்.
ஊடகங்களுக்கு அவர்கள் கட்டுரைகள் எழுதும் போது , பிரசுரமாகும் ஒரு கட்டுரைக்கு 700 ரூபாயே வழங்கப்படுகிறது. அதனை வைத்து அவர்கள் எவ்வாறு வாழவது ? எனவே இது தொடர்பில் ஊடக அமைச்சு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
No comments