கொழும்பு கொட்டாவ பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியமையால் வீட்டின் சமையலறை சேதமடைந்துள்ளது.
தெய்வாதீனமாக வீட்டில் இருந்தோருக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை.
இன்றைய தினம் காலை இடம்பெற்ற குறித்த சம்பவம் எரிவாயு கசிவினால் ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பொலிஸார் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக தெரிவித்தனர்.
அதேவேளை இந்த மாதத்தில் குறித்த வெடிப்பு சம்பவம் நான்காவது சம்பவமாக பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில், சமையல் எரிவாயு தொடர்பில் பரவி வரும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் நிராகரித்த Litro Gas Lanka Sales Director Janaka Pathiratne உள்நாட்டு திரவ பெற்றோலியம் (LP) எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
மேலும் தெரிவிக்கையில்,
பரப்பப்படும் அனைத்து செய்திகளும் உண்மையல்ல, கற்பனையானவை மற்றும் ஆதாரமற்றவை என தெரிவித்தார்.
தவறான அறிக்கைகளை வெளியிடுவதால், நிறுவனம், அரசாங்கம் மற்றும் 6 மில்லியன் மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். நாங்கள் சுமார் 150 ஆண்டுகளாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரத்தை கடைபிடித்து உள்ளூர் சந்தைக்கு எரிவாயுவை விநியோகத்தை செய்கிறோம்," என்று அவர் கூறினார்.
No comments