Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மாவீரர்களுக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் முழந்தாளிட்டு அஞ்சலி!


இராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையில் , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிசார்  தடையுத்தரவுகளை  பெற்றுள்ளனர். 

அதேவேளை கடந்த சில நாட்களாகவே யாழ்.பல்கலைக்கழக சூழலில் துப்பாக்கிகளுடன் இராணுவத்தினர், பொலிஸார்  குவிக்கப்பட்டு , பல்கலை சூழல் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிரமாக்கப்பட்டு இருந்தது. 

அந்நிலையில் , கண்காணிப்புக்கள் , தடைகளை தாண்டி பல்கலை வளாகத்தினுள் மாணவர்கள் மாவீரர்களுக்கு முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தினர். 

No comments