நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்வதற்கான இரண்டு இராஜினாமாக் கடிதங்களை ஜனாதிபதிக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி அனுப்பி வைத்ததாகவும் , அவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே நாடு- ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த விடயத்தில் தன்னிடம் எவ்விதமான ஆலோசனைகளும் பெறவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments