இலங்கை நாடாளுமன்றின் செங்கோலில், சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக பாராளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
நாடாளுமன்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அமைதியின்மைகளின் போது, இந்த சேதம் ஏற்பட்டிருக்கலாம், இந்த சேதங்களை சரி செய்வதற்கான இயலுமை, உள்நாட்டில் கிடையாது. செங்கோலில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின், அதனை பிரித்தானியாவிலுள்ள அதன் தாய் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். எனினும், குறித்த சேதம் பாரிய சேதம் கிடையாது என மேலும் தெரிவித்துள்ளார்.
No comments