தீபமேற்றும் பீடத்தை அழிப்பதன் ஊடாக அரசு சிற்றின்பமடையலாம் தமிழ்மக்களின் மனங்களில் அனுதினமும் தியாகச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கும் எமது விடுதலை வீரர்களின் தியாகத்தையோ இலட்சிய வேட்கையையோ அரசால் சிதைத்து விட முடியாது என துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டாளரும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமாகிய வி.எஸ் .சிவகரன் தெரிவித்தார்.
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்ல பிரதான தீபமேற்றும் பீடம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் துயிலுமில்ல ஏற்பாட்டு குழு சார்பில் கண்டனம் தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான தீம் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டது அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான செயல்.
துயிலுமில்ல நுழைவாயிலுக்கு அருகில் இராணுவம் உள்ளபோது யார் உடைத்திருக்க முடியும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. பல வருடங்களாக இருந்த இந்த பொதுச்சுடர் ஏற்றும் தீப பீடத்தை சற்றும் மனிதாபிமானம் இன்றி மிலேச்சத்தனமான முறையில் உடைத்து அழிக்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் நானும் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவின் பொருளாளரும் மன்னார் நகரசபை தலைவருமாகிய அன்ரனி டேவிற்சனும் சென்று பார்வையிட்டோம்.
தீபமேற்றும் பீடத்தை அழிப்பதன் ஊடாக அரசு சிற்றின்பமடையலாம் தமிழ்மக்களின் மனங்களில் அனுதினமும் தியாகச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கும் எமது விடுதலை வீரர்களின் தியாகத்தையோ இலட்சிய வேட்கையையோ அரசால் சிதைத்து விட முடியாது என்பதை இக் கேவலமான செயலில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.என வி.எஸ் சிவகரன் தெரிவித்தார்.
தீபமேற்றும் பீடத்தை அழிப்பதன் ஊடாக அரசு சிற்றின்பமடையலாம் தமிழ்மக்களின் மனங்களில் அனுதினமும் தியாகச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கும் எமது விடுதலை வீரர்களின் தியாகத்தையோ இலட்சிய வேட்கையையோ அரசால் சிதைத்து விட முடியாது என்பதை இக் கேவலமான செயலில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.என வி.எஸ் சிவகரன் தெரிவித்தார்.
அத்துடன் இச்சம்பவம் மாவீரர்களின் பொற்றோர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.
No comments