Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தீபாவளி வழிபாட்டுக்கு சென்றவர்கள் வீட்டில் 22 இலட்சம் பெறுமதியான நகை உள்ளிட்டவை கொள்ளை!

 


தீபாவளியை முன்னிட்டு ஆலய வழிப்பாட்டுக்கு சென்றவர்களின் வீட்டை உடைத்து உட்புகுந்த கொள்ளைக்கும்பல் , வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் உள்ளிட்ட 28 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். 

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் இக் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. 
 
மைலம்பாவெளி பிரதான வீதியில் உள்ள வீடொன்றில் வசித்த குடும்பம் தீபாவளியை முன்னிட்டு ஆலய வழிப்பாட்டுக்காக காலை 11  மணியளவில் வீட்டை பூட்டி விட்டு ஆலயத்திற்கு சென்றுள்ளனர். 
 
ஆலய வழிப்பாட்டை முடித்த பின்னர் மதியம் 1 மணியளவில் வீடு திரும்பிய போது , வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்த போது , அறையொன்றினுள் இருந்த அலுமாரி உடைக்கப்பட்டு அதனுள் இருந்த 22 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் 06 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.. 
 
சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments