சபுகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் பயணப்பொதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் கொழும்பு மாளிகாவத்த பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நேற்றைய தினம் அநாதரவாக கிடந்த பயணப்பொதி தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அதனை சோதனையிட்ட போது , அதற்குள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவர் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , மீட்கப்பட்ட சடலத்தினை இன்றைய தினம் அடையாளம் கண்டுள்ளனர். தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
No comments