யாழ்.மீசாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த திருட்டுக் கும்பல் சுமார் 9 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.
மீசாலை வடக்கு - பூதவராயர் கோவிலை அண்மித்த பகுதியில் தனிமையில் வாழும் பெண் ஒருவர் பாதுகாப்பு கருதி உறவினர் ஒருவரின் வீட்டில் இரவில் உறங்குவதற்கு சென்றுள்ளார்.
அதனை அவதானித்த திருட்டுக் கும்பல் அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர், வீட்டை உடைத்து உட்புகுந்து சுமார் 9 பவுண் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதுடன், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரீ.வி கமராவின் சேமிப்பு தொகுதியும் துாக்கிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments