சீரற்ற வானிநிலையினால் குளியாப்பிட்டிய விலபொல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை மற்றும் மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
38 வயதான தந்தையின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டதுடன் மகனின் சடலம், இன்று (10) கண்டெடுக்கப்பட்டது.
குளியாப்பிட்டிய, விலபொல பிரதேசத்தில் தனது மகனை (11 வயது) மகனை பிரத்தியேக வகுப்புக்கு நேற்று (09) அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்பும் போதே இருவரும் இந்த அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.
மாதம்பே மத்திய கல்லூரியில் கல்வி கற்ற சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
No comments