Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாதகலில் மக்களின் எதிர்ப்பால் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!


யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. 

மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் , அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்படவிருந்தது.
 
காணிகளை அளவீடு செய்வதற்காக  நிலஅளவை  திணைக்கள  உத்தியோகஸ்தர்கள் வருகை தண்டஹ் போது , காணி உரிமையாளர்கள் , அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து , காணி அளவீட்டுப்பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர். 

No comments