கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பரந்தன் சிவபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா கேதீஸ்வரன் (வயது 27) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தற்காலிக கொட்டகை ஒன்றில் நேற்றிரவு இவர் தங்கியிருந்த நிலையில் இன்று காலை உடலில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments