நிக்கவெரட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
நிக்கவெரட்டிய கந்தேகெதர பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று வெள்ளிக்கிழமை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. குறித்த வெடிப்பு சம்பவம் இந்த மாதத்தில் 5ஆவது வெடிப்பு சம்பவமாக பதிவாகியுள்ளது.
சிலிண்டர் வெடித்த போது , கணவன் மனைவி இருவரும் வயல் வேலைக்கு சென்று இருந்ததாகவும் , அவர்களின் மூத்த பிள்ளை பாடசாலையிலும் , இராண்டாவது பிள்ளை அயல் வீட்டிலும் இருந்ததால் , வீட்டாருக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
இருந்த போதிலும் வெடிப்பு சம்பவத்தினால் வீடும் , வீட்டில் இருந்த பல பொருட்களும் சேதமடைந்துள்ளனது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவமானது , நவம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐந்தாவது வெடிப்பு சம்பவமாக பதிவாகியுள்ளது.
ஏற்கனவே , 04 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட சுற்றுலா விடுதியிலும் , 16 ஆம் திகதி இரத்தினபுரி பஸ் தரிப்பிடத்திற்கு அருகே தனியார் உணவு விற்பனை நிலையத்திலும் , 20 ஆம் திகதி கொழும்பு ரீட் மாவத்தையிலுள்ள சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனமொன்றுக்கு சொந்தமான உணவக வளாகத்திலும் , நேற்றைய தினமான 25ஆம் திகதி கொட்டாவ – பன்னிப்பிட்டிய கல்லூரி சந்தி அருகிலுள்ள வீடோன்றில் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
அதேவேளை முன்னதாக, 2021 மார்ச் 03 ஆம் திகதி மருதானை – சங்கராஜ மாவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றினுள் எரிவாயு கசிவினால் வெடிப்பு சம்பவம் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments