சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்றைய தினம் நாட்டிற்கு வருகைத் தந்த கிஹானி இன்பென்டினோ, இலங்கை தேசியக் கொடியுடனான முகக்கவசமொன்றை அணிந்திருந்தமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெறும் மஹிந்த ராஜபக்ஸ கால்பந்து கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் விசேட அதிதியாக கலந்துக்கொள்ளும் நோக்கிலேயே அவர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தில் தலைவர் கிஹானி இன்பென்டினோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
No comments