Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சீரற்ற காலநிலையால் யாழில் 216 குடும்பங்கள் பாதிப்பு!

 


தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக216 குடும்பங்களைச் சேர்ந்த 758  நபர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ்  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று மாலை நான்கு மணிவரையான நிலவரம் தொடர்பாக  கருத்து தெரிவிக்கையில் .

நேற்று முதல் பெய்தமழை மற்றும் அதிக காற்று  காரணமாக 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 நபர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

5வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் காரைநகரில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர்  தற்காலிகமாக வியாவில் பயிற்சி நிலையத்தில்  தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்.

இதேவேளை காரைநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியினை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவினர் நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டு சேத விபரங்கள் தொடர்பில் கள ஆய்வில் ஈடுபட்டனர்

No comments