Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பொலிஸ் காவலில் உயிரிழந்தவரின் சடலத்தின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைப்பு!


பனாமுர பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையின் பின்னர், மேலதிக பரிசோதனைக்காக சடலத்தின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பனாமுர, வெலிபோதயாய பகுதியைச் சேர்ந்த 38 வயதான இந்திக்க ஜயரத்ன என்பவரே நேற்று பனாமுர பொலிஸ் சிறைக்கூண்டுக்குள் உயிரிழந்திருந்தார்.

சந்தேக நபரின் மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து சந்தேக நபரின் மரணத்தின் போது கடமையாற்றிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளதாக பனாமுர பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் பிரேத பரிசோதனை இன்று எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட சட்ட வைத்திய அதிகாரி முனசிங்க கமகே தலைமையில் மேற்கொள்ளப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக சடலத்தின் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

No comments