மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்ல பிரதான சுடர் ஏற்றும் தீப பீடம் உடைத்து அழிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் வாரம் ஆரம்பமாக உள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பிரிவுகளுக்குள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவை பொலிஸார் பெற்றுள்ளனர்.
அந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் தீப பீடம் இன்றைய தினம் அதிகாலை இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் உடைத்து அழிக்கப்பட்டுள்ளது.
No comments