Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

படுக்க இடம் பிடிப்பதில் யாசகர்கள் இடையில் போட்டி - ஒருவர் கத்திக்குத்தில் உயிரிழப்பு!


பேருந்து தரிப்பிடத்தில் இரவு உறங்குவதற்கு இடம் பிடிப்பதில் யாசகர்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். 

வேலூர் மாவட்டம் காட்பாடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திலையே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
குறித்த பேருந்து நிலையத்தில் யாசகர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு உடல்கூற்று பரிசோதனைக்காக வேலூர் அரச மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் தூங்கும் இரண்டு யாசகர்கள் இடையில், தூங்குவதற்கான இடத்தினை பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. 
 
தகராறு முற்றிய நிலையில் ஒருவர் மற்றவரை கத்தியால் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கானவர் உயிரிழந்ததும் ,குத்தியவர் அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 
 
தப்பியோடிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments