கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் (வயது 72) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரபல நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஹைதராபாதில் உள்ள AIG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிவசங்கர் மாஸ்டர், அவரது மனைவி மற்றும் மூத்த மகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு அதிக செலவு கொண்ட சிகிச்சை அளிக்க வேண்டி இருந்தது.
இந்த சிகிச்சைக்கான கட்டணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியாத காரணத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தனது அப்பாவுக்கு உதவும்படி சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதோடு திரைத்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருந்த பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மண்வாசனை, திருடா திருடி, மகதீரா, பாகுபலி 1 உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் சிவசங்கர் மாஸ்டர்.
இவர் மகதீரா படத்தில் வரும் தீர தீர பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதோடு இவர் வரலாறு, சர்க்கார், கண்ணா லட்டு தின்ன ஆசையா, உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
No comments