கந்தசஷ்டி விரத கால பகுதியில் , பசறை கஹாவத்தை பெருந்தோட்ட பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்த பெறுமதியான வள்ளி , தெய்வானை சமேதரரான முருகன் சிலை திருடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் , முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து , பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆலயத்திற்கு நேற்று திங்கட்கிழமை மாலை கும்பிட சென்ற பெண்ணொருவர் , ஆலயத்தில் முருகனின் சிலையை காணாததை கண்டு , ஆலய பூசகர் மற்றும் நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளார்.
அதனை அடுத்து அவர்கள் ஆலயத்திற்கு சென்று பார்த்த போது ஆலய பூட்டு உடைத்து முருகன் சிலை திருடப்பட்டதனை அவதானித்து அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
No comments