Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சிலிண்டர் வெடிப்புக்களுக்கு எரிவாயு கசிவுகளே காரணம்!


இரசாயன செறிமானத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே, கடந்த சில நாட்களில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றின் மூலம், இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், 

அண்மையில், மெக்டொனால்ட் உணவகத்தில் ஏற்பட்ட தீப் பரவலுக்கு, அந்த உணவகத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டு வெடித்தமையே காரணமாகும். அச் சந்தர்ப்பத்தில், செயல்நிலையிலிருந்த மின்சார உபகரணங்களிலிருந்து வெளியான தீப்பொறிகளும் அதற்குக் காரணமாகும்.

அதேவேளை இதற்கு முன்னர், இரத்தினபுரி, அலவ்வ, வெலிகம உள்ளிட்ட சில பிரதேசங்களில், இதேபோன்று எரிவாயு கசிவு காரணமாக, ஏற்பட்ட தீப்பரவல் சம்பவங்கள் ஏற்பட்டன. 

இதேநேரம்,  கொட்டாவ பன்னிப்பிட்டிய பகுதியில், வீடொன்றில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்திற்கு எரிவாயு கசிவே காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments