Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயன்றவரை தாக்கி விட்டு தப்பித்த மாணவி!


பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயன்றவரை மாணவி கடுமையாக தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி வந்துள்ளார்.

பண்டாரவளை , எல்ல கரந்தகொல்ல பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. 
 
அப்பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி பாடசாலை முடிந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை , ஆள்நடமாற்றம் அற்ற குறித்த வீதியில் ஸ்கூட்டரில் வந்த நபர் ஒருவர் மாணவியை தாக்கி , அருகில் இருந்த பற்றைப்பகுதிக்குள் இழுத்து சென்றுள்ளார். 
 
அங்கு மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற போது , மாணவி குறித்த நபரை கடித்து , கல்லொன்றினால் கடுமையாக தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி வந்துள்ளார். 
 
சம்பவம் தொடர்பில் பெற்றோருக்கு மாணவி தெரிவித்ததை அடுத்து , பெற்றோர் மாணவியை அழைத்து சென்று எல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். 
 
குறித்த வீதி ஆள் நடமாற்றம் அற்ற நிலையிலும் , பற்றை காடாக உள்ளதாலும் , அப்பகுதிகளில் சட்டவிரோத கும்பல்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் , அதனால் அவ்வீதி ஊடாக பயணிப்போர் அச்சத்துடன் பயணிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 
 
அதேவேளை மாணவியின் முறைப்பாட்டின் பிரகாரம் , மாணவியின் தாக்குதல் காயங்களுடன் தப்பி சென்ற நபரை கைது செய்வதற்கு பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.  

No comments